Friday, November 10, 2006

கதவிலக்கம் 28

கடக்காமல் நின்றன
கால்கள்
கதவிலக்கம் 28

நானாக வரவில்லை
போகும் வழிதான்
வேறுவழி போயிருக்கலாம்..

நின்று முகம் தேடுகிறேன்..
நீ இருக்கிறாயா என்று..
மறுதலித்த பின்பும்
மறக்காத நெஞ்சம்..

அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்..


3 Comments:

Blogger சத்தியா said...

"நின்று முகம் தேடுகிறேன்..
நீ இருக்கிறாயா என்று..
மறுதலித்த பின்பும்
மறக்காத நெஞ்சம்..

அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்.."...

அற்புதம்!... காதலின் ஏக்கம் அழகான கவி வரிகளில்.

வாழ்த்துக்கள்.

11:28 AM  
Anonymous Anonymous said...

மிக அழகான அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

2:17 PM  
Blogger ப்ரியன் said...

/*அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்*/

அருமையான வரிகள் சாத்வீகன்...வாழ்த்துக்கள் தொடருங்கள்

9:13 AM  

Post a Comment

<< Home