தாழ்வு மண்டலம்
காத்திருந்தேன்..
கண்டு கொள்ளாது..
கடந்து சென்றாய்..
என்னுள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..
சேதாரங்களை சரிசெய்து
காத்திருக்கிறேன்..
மீண்டும் வந்து
கரை கடப்பாய் என்று..
சில சமயம் கவிதைகள் என்னால் பின்னப்பட்டு.. சில சமயம் நான் கவிதைகளால் பின்னப்பட்டு...
1 Comments:
/சேதாரங்களை சரிசெய்து
காத்திருக்கிறேன்..
மீண்டும் வந்து
கரை கடப்பாய் என்று../
மிக அழகான கற்பனை. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home