உனது இன்மை
உனது இன்மை
அந்தி சாய்ந்ததும்
ஆளரவமற்ற தெருக்கள்
அடிக்கும் குளிர்காற்று
உடலை கிழிக்க
உள்ளம் கிழிக்கும்
உனது இன்மை...
உறையும் பனியில்
இலைகளின் இறுதி ஊர்வலத்தின்
மீது ஊர்ந்து வந்தது
குளிர் காலம்
உறையும் பனியில்
உனக்காக உருகும் உள்ளம்.
வழியெங்கும்
வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல....


4 Comments:
/வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல..../
மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
நன்றி தாரிணி
வந்தமைக்கும், வாசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்...
வழியெங்கும்
வாடிய இலைகள்
வண்ணமிழந்து
குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல..
என்னைப் போல....
மிக மிக அருமை
//இலைகளின் இறுதி ஊர்வலத்தின்
மீது ஊர்ந்து வந்தது
குளிர் காலம்
உறையும் பனியில்
உனக்காக உருகும் உள்ளம். //
//வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல.... //
சருகுகளாய் நினைவுகளை கோர்த்தமை நன்று சாத்வீகன் ரசித்தேன் :))
Post a Comment
<< Home