Sunday, November 12, 2006

அறைபடும் கதவுகள்

வெளியே நிற்கிறேன்..
கதவுகளை அறைந்து செல்கின்றாய்..
விலகாமல் நிற்கிறேன்
கதவினை கவனித்தபடி..
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந் தாழ்...
எனது அன்பு நிஜமெனில்
தானாய்த் திறக்கும் கதவுகளென..

உனது மறுதலிப்பை
மறுதலிக்கிறேன்
மறுமுறை பரிசீலனை செய்..
மனக்கதவை திறப்பதற்கு.