Sunday, November 19, 2006

பின்னிருக்கை அமர பிறந்தவள்

பத்து நிமிடம்
துடைக்கிறேன்
எனது வண்டியின்
பின்னிருக்கையை..
ஏனென்று நீயறிவாய்..


***************

ஏனென்று
தெரியவில்லை
நீ அமர வேண்டி
தவமிருக்கிறது எனது வண்டி

***************

பின்னிருக்கையில் நீ..
வேகத்தடையின்றி
நீளும் சாலை..
வெறுத்து போகிறது
என் மனம்.


**************

2 Comments:

Blogger நவீன் ப்ரகாஷ் said...

//பின்னிருக்கையில் நீ..
வேகத்தடையின்றி
நீளும் சாலை..
வெறுத்து போகிறது
என் மனம்.//

:))))))))))

சாத்வீகனுக்கு சாலையே வேகத்தடையாக அமைவதாக !!! :)))
நன்று !

12:19 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி Naveen

10:23 PM  

Post a Comment

<< Home