Thursday, December 28, 2006

கோபம் கொண்டவள்.....

புயலடித்து ஓய்ந்திருந்தது...

கோபத்தில் வந்த வார்த்தைகளை
கொட்டித் தீர்த்திருந்தாய்...

பதில் எதுவும் சொல்லாமல் நான்..
எனது பதில்கள் உனது
கோபத்தில் நெய் வார்க்கும் என்பதை நானறிவேன்..


கோபத்தில் நீ கலைத்து போட்ட
புத்தகங்களை எடுத்து அடுக்கினேன்..

அமைதியாய் என்னை பார்த்து
கொண்டிருந்தாய்...

உனது விசும்பல்..
உனது விழிநீர்..

தாங்காத எனது மனம்..
உனது அருகில் வந்து
தோளில் கை வைத்தேன்..
தட்டி விட்டாய்..

மீண்டும் ஒரு முறை
மறுதலிக்கப்பட்டது எனது கை..

மூன்றாம் முறை.......
இம்முறை எனது கைகளை விலக்கவில்லை..
பற்றிக் கொண்டாய்..

மெல்ல தோள் சாய்ந்து
மீண்டும் அழ ஆரம்பித்தாய்..

தேற்றத் துவங்கினேன் நான்...

எதற்காக சண்டையிட்டோம் என்பதை
இருவருமே மறந்து போனோம்.



0 Comments:

Post a Comment

<< Home