மரணத்தை வேண்டுகிறேன்
சில வார்த்தைகள் உதிர்ந்தன
என் வாய் தவறி...
வார்த்தைகளை பிடித்துக்கொண்டாய்...
பிய்த்தெறிந்தாய் என்னை
பஞ்சு பஞ்சாய்...
உன் வார்த்தைகளால் என்னை
தீயிட்டாய்...
மன்னிப்புக் கேட்டும்
மன்னிக்கவில்லை நீ...
வெந்து சாம்பலானது என் உள்ளம்...
உன் காதலை வேண்டிய நான்
இன்று மரணத்தை வேண்டுகிறேன்.


0 Comments:
Post a Comment
<< Home